Captain Mayuran (Balasabapathy Thiyagarajah) Jacket Bodyguard | |
Captain Mayuran (SABA)
Captain Mayuan (Saba)
Thursday, November 5, 2020
Monday, October 12, 2020
Sunday, May 24, 2020
மணலாறு முல்லையின் முன்னைய முற்றுகை அத்தியாயம்
இந்திய அமைதிப்படை காலத்தில் மிக இறுக்கமாக முற்றுகை நடத்தப்பட்ட பகுதி முல்லைத்தீவு – திருகோணமலை எல்லை பகுதியான மணலாறு காடுகள்.
புலிகளின் முடிவுரையை எழுத போகின்றோம் என்று “கார்பெட் போர்மிங்” செய்ய போகின்றோம் என்று சொல்லி கொண்டு இந்தியா என்ற பெரு தேசம் தனது முப்படையையும் இறக்கியது.
40 000 க்கு மேற்பட்ட துருப்புகள்.
20 க்கு மேற்ப்பட்ட விமானங்கள்
பலமான ஆயுதங்கள் இவ்வளவும் யாருக்காக ?
புலிகளின் தலைவரை கொல்ல /அல்லது உயிருடன் பிடிக்க என சர்வ சாதாரணமாக எண்ணி இறங்கியது இந்திய படை.
ஒரு தலைவர் மற்றும் அவருடன் அக் காட்டுக்குள் வெறும் 100 வீரர்கள்.
உண்மையில் அன்று இந்திய ராணுவம் அப்பகுதியை வெளிபகுதி போராளிகளின்
தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தி தான் இருந்தது.உணவோ ,மருத்துவ
உதவியோ,தகவல் பரிமாற்றமோ மிகவும் கடினமானது.
இப்படி முற்றுகையை இறுக்கிய இந்திய அரசு ,அதே வேளை தமிழகத்தில் இருந்த போராளிகள் மூலம் பிரபாகரன் அவர்கள் சரணடைய டீல் பேசியது.
ஆனால் பணத்துக்காக அன்று அவர்கள் மக்களின் உரிமையை நிலத்தை அடகு வைக்க முடிவெடுக்கவில்லை.
இதே வேளை சில தளபதிகள் தலைவரை பாதுகாப்பாக வெளியே தப்ப வைக்கும் முயற்சியை திட்டமிட்டார்கள்.
ஒருவேளை அன்று பிரபாகரன் வெள்ளை கொடியுடன் இந்திய படைகளிடம் சரணடைந்தால் சுட்டு கொள்ளும் படி ராஜீவ் சொன்னதாகவும் இராணுவ தளபதிகள் மறுத்ததாகவும் செய்திகள் உண்டு.
மணலாறு முற்றுகையை உடைத்த ஜொனி மிதி வெடிகள்
ஜொனி என்பது புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர்.இந்திய அரசால் நய வஞ்சகமாக கொல்லப்பட்ட தளபதி.
ஒரு தரைப்படை வீரனை கனவிலும் அச்சுறுத்துவது மிதிவெடிகளும் பொறிவெடிகளும் கண்ணிகளும் தான். இப்படியான சந்தர்ப்பங்களில், தூக்கிய ஒருகாலைக் கீழே வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு படைவீரன் செத்துப் பிழைக்கின்றான். இந்த மிதிவெடிகளை, எறும்புக்கூட்டம் போல வரவிருக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால் நல்ல பலனைக் காணலாம்.
ஆனால் உயர் தொழில்நுட்பத்துடன் உற்பத்திசெய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் இத்தகைய மிதிவெடிகளுக்கு நாம் எங்கே போவது? தலைவரது கனவிலும் -நினைவிலும் இந்தக் கேள்வியே உதித்து விடைதேடப் போராடியது. ஒரு நாள் அதிகாலை நான்கு நான்கரை மணியிருக்கும் காட்டுப் பாசறையில் தனது படுக்கையில் இருந்தபடி சிந்தித்துக் கொண்டிருந்த தலைவர் அவர்கள் திடீரென எழுந்து, சில நூறுயார் தள்ளி இருந்த பாசறையில் தங்கியிருந்த இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் பொறுப்பாளர்களைத் தேடிச் சென்றார். தனது மனதில் தோன்றிய மிதிவெடித் தயாரிப்புப் பொறிமுறை பற்றி அவர்களுக்கு அப்போதே விளக்கிக்கூறினார்.
காட்டிலேயே கிடைக்கக்கூடிய மரத்தடி-ரின் பால்ப்பேணி, மற்றும் றபர்பான்ட்’ என்பவற்றைக் கொண்டு, சிறுபிள்ளைகள் விளையாடும் ‘கெற்றப்போலின்’ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மிதிவெடிகளைத் தயாரிக்க முடியும் என்று தலைவர் விளக்கி நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார். பரீட்சார்த்த முயற்சிகள் தொடங்கின. சிறுதொகையில் வெடிமருந்தும், ‘பென்டோச்’ பற்றரியும், டெற்றொனேற்றரும்’ தவிர மிகுதி அனைத்துப் பொருட்களும் உள்ளூர்ப் பொருட்கள். இறுதியில் முயற்சி வெற்றிகண்டது.
இப்போது இந்தியப் படைகள் மணலாற்றுக் காட்டைச் சூழ பல்லாயிரக் கணக்கில் விரைவாகக் குவிக்கப்பட்டனர். அதற்கு ஒப்பறேசன் செக்மேற் எனப் பெயரிட்டனர். மெதுவான வேகத்தில் மிதிவெடி தயாரிப்புத் தொடங்கியது. அந்த மிதிவெடிக்குத் தலைவர் பெயரிட்டார் ஜொனி மிதிவெடி. இந்தியப் படைகள் காட்டுச் சமரைத் தொடங்கிவிட்டன. ஜொனிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு காட்டுக்குள் நுழைந்த இந்தியப் படைக்கு, ‘ஜொனி மிதிவெடி’கள் நம்பிக்கைத் துரோகம் செய்யத் தொடங்கிவிட்டன.
ஜொனியின் பயணத்தை நயவஞ்சகமாகப் பயன்படுத்தி ‘பாதை’ கண்டுபிடித்த இந்தியப் படைகளுக்கு இப்போது, ஜொனி மிதிவெடிகள் பாதத்தைக் கழற்றிக் கொண்டிருந்தன. இந்தியப் படைகள் எண்ணியதைப் போல தலைவரை அழிக்க முடியவில்லை. செக்மேற் 1……2……3 என இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது. 100……200……300 என இந்தியப் படைகளின் கால்களும் கழற்றப்பட்டன. ‘செக்மேற்’ அவமானத்துடன் முடிந்தது.
மணலாறு முற்றுகை முறியடிக்கப்பட்டது.
இதே சம்பவம் மீள முள்ளிவாய்காலில் நிகழ்ந்தது.இந்திய நேரிடையாக மூக்கு உடைபடாமல் மறைமுகமாக பல வல்லரசுகளுடன் மீள நய வஞ்சகம் செய்தன.
முள்ளிவாய்க்கால் முற்றுகை இன்னும் பல விடை சொல்லாத கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.
Quelle - Eelamalar
March 27th, 2020 12:00 AM
புலிகளின் முடிவுரையை எழுத போகின்றோம் என்று “கார்பெட் போர்மிங்” செய்ய போகின்றோம் என்று சொல்லி கொண்டு இந்தியா என்ற பெரு தேசம் தனது முப்படையையும் இறக்கியது.
40 000 க்கு மேற்பட்ட துருப்புகள்.
20 க்கு மேற்ப்பட்ட விமானங்கள்
பலமான ஆயுதங்கள் இவ்வளவும் யாருக்காக ?
புலிகளின் தலைவரை கொல்ல /அல்லது உயிருடன் பிடிக்க என சர்வ சாதாரணமாக எண்ணி இறங்கியது இந்திய படை.
ஒரு தலைவர் மற்றும் அவருடன் அக் காட்டுக்குள் வெறும் 100 வீரர்கள்.
இப்படி முற்றுகையை இறுக்கிய இந்திய அரசு ,அதே வேளை தமிழகத்தில் இருந்த போராளிகள் மூலம் பிரபாகரன் அவர்கள் சரணடைய டீல் பேசியது.
- புனர்வாழ்வு பணிகளுக்கு 500 கோடி
- புலிகளுக்கு 200 கோடி
ஆனால் பணத்துக்காக அன்று அவர்கள் மக்களின் உரிமையை நிலத்தை அடகு வைக்க முடிவெடுக்கவில்லை.
இதே வேளை சில தளபதிகள் தலைவரை பாதுகாப்பாக வெளியே தப்ப வைக்கும் முயற்சியை திட்டமிட்டார்கள்.
- பணம் வாங்கி கொண்டு சரணடையும் முடிவு
- தப்பி ஓடும் திட்டம்
"ஒரு கோழையை போல நான் மட்டும் தப்பி செல்வதை நான் விரும்பவில்லை.ஒரு வீரனாக போரிட்டு சாவதையே விரும்புகின்றேன். இந்த மணலாறு பண்டாரவன்னியன் போன்ற வீரர்கள் திரிந்த காடு. போராடி வெல்வேன் அல்லது வீரச்சாவடைவேன். எனக்கு பிறகு இன்னொரு பிரபாகரனோ பிரபாகரியோ தலைமையேற்று வழி நடத்த வேண்டும்”அன்றும் வெள்ளைக்கொடி
ஒருவேளை அன்று பிரபாகரன் வெள்ளை கொடியுடன் இந்திய படைகளிடம் சரணடைந்தால் சுட்டு கொள்ளும் படி ராஜீவ் சொன்னதாகவும் இராணுவ தளபதிகள் மறுத்ததாகவும் செய்திகள் உண்டு.
மணலாறு முற்றுகையை உடைத்த ஜொனி மிதி வெடிகள்
ஜொனி என்பது புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர்.இந்திய அரசால் நய வஞ்சகமாக கொல்லப்பட்ட தளபதி.
ஒரு தரைப்படை வீரனை கனவிலும் அச்சுறுத்துவது மிதிவெடிகளும் பொறிவெடிகளும் கண்ணிகளும் தான். இப்படியான சந்தர்ப்பங்களில், தூக்கிய ஒருகாலைக் கீழே வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு படைவீரன் செத்துப் பிழைக்கின்றான். இந்த மிதிவெடிகளை, எறும்புக்கூட்டம் போல வரவிருக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால் நல்ல பலனைக் காணலாம்.
ஆனால் உயர் தொழில்நுட்பத்துடன் உற்பத்திசெய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் இத்தகைய மிதிவெடிகளுக்கு நாம் எங்கே போவது? தலைவரது கனவிலும் -நினைவிலும் இந்தக் கேள்வியே உதித்து விடைதேடப் போராடியது. ஒரு நாள் அதிகாலை நான்கு நான்கரை மணியிருக்கும் காட்டுப் பாசறையில் தனது படுக்கையில் இருந்தபடி சிந்தித்துக் கொண்டிருந்த தலைவர் அவர்கள் திடீரென எழுந்து, சில நூறுயார் தள்ளி இருந்த பாசறையில் தங்கியிருந்த இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் பொறுப்பாளர்களைத் தேடிச் சென்றார். தனது மனதில் தோன்றிய மிதிவெடித் தயாரிப்புப் பொறிமுறை பற்றி அவர்களுக்கு அப்போதே விளக்கிக்கூறினார்.
காட்டிலேயே கிடைக்கக்கூடிய மரத்தடி-ரின் பால்ப்பேணி, மற்றும் றபர்பான்ட்’ என்பவற்றைக் கொண்டு, சிறுபிள்ளைகள் விளையாடும் ‘கெற்றப்போலின்’ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மிதிவெடிகளைத் தயாரிக்க முடியும் என்று தலைவர் விளக்கி நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார். பரீட்சார்த்த முயற்சிகள் தொடங்கின. சிறுதொகையில் வெடிமருந்தும், ‘பென்டோச்’ பற்றரியும், டெற்றொனேற்றரும்’ தவிர மிகுதி அனைத்துப் பொருட்களும் உள்ளூர்ப் பொருட்கள். இறுதியில் முயற்சி வெற்றிகண்டது.
இப்போது இந்தியப் படைகள் மணலாற்றுக் காட்டைச் சூழ பல்லாயிரக் கணக்கில் விரைவாகக் குவிக்கப்பட்டனர். அதற்கு ஒப்பறேசன் செக்மேற் எனப் பெயரிட்டனர். மெதுவான வேகத்தில் மிதிவெடி தயாரிப்புத் தொடங்கியது. அந்த மிதிவெடிக்குத் தலைவர் பெயரிட்டார் ஜொனி மிதிவெடி. இந்தியப் படைகள் காட்டுச் சமரைத் தொடங்கிவிட்டன. ஜொனிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு காட்டுக்குள் நுழைந்த இந்தியப் படைக்கு, ‘ஜொனி மிதிவெடி’கள் நம்பிக்கைத் துரோகம் செய்யத் தொடங்கிவிட்டன.
ஜொனியின் பயணத்தை நயவஞ்சகமாகப் பயன்படுத்தி ‘பாதை’ கண்டுபிடித்த இந்தியப் படைகளுக்கு இப்போது, ஜொனி மிதிவெடிகள் பாதத்தைக் கழற்றிக் கொண்டிருந்தன. இந்தியப் படைகள் எண்ணியதைப் போல தலைவரை அழிக்க முடியவில்லை. செக்மேற் 1……2……3 என இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது. 100……200……300 என இந்தியப் படைகளின் கால்களும் கழற்றப்பட்டன. ‘செக்மேற்’ அவமானத்துடன் முடிந்தது.
மணலாறு முற்றுகை முறியடிக்கப்பட்டது.
இதே சம்பவம் மீள முள்ளிவாய்காலில் நிகழ்ந்தது.இந்திய நேரிடையாக மூக்கு உடைபடாமல் மறைமுகமாக பல வல்லரசுகளுடன் மீள நய வஞ்சகம் செய்தன.
முள்ளிவாய்க்கால் முற்றுகை இன்னும் பல விடை சொல்லாத கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.
Quelle - Eelamalar
March 27th, 2020 12:00 AM
Sunday, May 24, 2015
மணலாறு உதயபீடம் முகாமில் தலைவருடன் கப்டன் மயூரன் (1987)
1987 இல் மணலாறு உதயபீடம் முகாமில்
நிற்பவர்கள் இடமிருந்து வலமாக
டேமியன், சயந்தன், தலைவர் பிரபாகரன்
இருப்பவர்கள் இடமிருந்து வலமாக
லெப் கேணல் ரொபேர்ட் (அல்லது வெள்ளை), ஈஸ்வரன் மாஸ்டர், கப்டன் மயூரன், லோலோ
Wednesday, May 20, 2015
Sunday, May 10, 2015
கப்டன் மயூரன் வீர வணக்கம்!
கப்டன் மயூரன்
(நவம்பர் 1, 1970- நவம்பர் 11, 1993)
மேலைப்புலோலியூர்
ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை
மயூரன் என்ற புனைபெயரைக் கொண்ட பாலசபாபதி தியாகராஜா தனது பதினோழாவது வயதில்,1987இல் விடுதலைப் போராட்டத்தில்இணைந்து கொண்டார். ஆறு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். நவம்பர் 11,1993 அன்று நடைபெற்ற பூநகரிப் பெருந்தளச் சமர், தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் வீரமரணமடைந்தார்.
கரும்புலியாய் செல்லவில்லை
கரும்புலி போல் ஆகிவிட்டீர்.
அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க திண்ணம் கொண்டான் மயூரன்.
பருத்தித்துறை ஆத்தியடியில்
``````````````````````````````````````````````````````
பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.
15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.
அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே காட்லியின் கல்வியைக் கை விட்டு1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.
இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க… ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.
மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.
திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான். அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.
கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன்ஒருக்கால் வந்தாய்
நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய்
தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க
கையில் பெடியோடு உனது அண்ணி
கண் கலங்கப் பார்த்திருக்க
பார்த்தாயா…யா? புரியவில்லை
நினைவில் தெரியவில்லை.
தெருவோடு நீ ஓடி
துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி
குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம்
கனவாக மறைந்து போனாய்
சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய்
எம் கண்ணிலெல்லாம் காயாத
நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய்.
இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ..? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும், வாங்கி வா என்று அனுப்பினான்.
பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்றபோது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள்.
ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகி விட்டான்.
மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது.
மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி
பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே
பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா
தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு
தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த
கதைகள் பல இங்கு காதில் அடிபடுது
ஆனாலும் மயூரா உன்
உடலைக் காணவில்லையடா
விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு
விதி எமக்கு இல்லையடா - அதனால்தான்
உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது
சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா
பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில்
கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம்
நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம்
மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம்
உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம்
உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம்
- தீட்சண்யன்
மயூரனின் நண்பர்களின் நினைவில்
```````````````````````````````````````````````````````````
களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையிpல்
கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டாய்
களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை
வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே
எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே
என்றுன்னை நினைக்க மாட்டோம்
எரியாகி எரிந்து விட்டாய்
எரிமலையாகி வெடித்து விட்டாய்
நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா!
உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை
உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே
உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே…
- நண்பர்கள்
மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)
``````````````````````````````````````````````````````````````````````````````
அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன்.
அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை..
என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!
Quelle - tamilarinthagam.blogspot.de
(நவம்பர் 1, 1970- நவம்பர் 11, 1993)
மேலைப்புலோலியூர்
ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை
மயூரன் என்ற புனைபெயரைக் கொண்ட பாலசபாபதி தியாகராஜா தனது பதினோழாவது வயதில்,1987இல் விடுதலைப் போராட்டத்தில்இணைந்து கொண்டார். ஆறு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். நவம்பர் 11,1993 அன்று நடைபெற்ற பூநகரிப் பெருந்தளச் சமர், தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் வீரமரணமடைந்தார்.
கரும்புலியாய் செல்லவில்லை
கரும்புலி போல் ஆகிவிட்டீர்.
அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க திண்ணம் கொண்டான் மயூரன்.
பருத்தித்துறை ஆத்தியடியில்
``````````````````````````````````````````````````````
பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.
15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.
அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே காட்லியின் கல்வியைக் கை விட்டு1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.
இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க… ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.
மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.
திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான். அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.
கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன்ஒருக்கால் வந்தாய்
நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய்
தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க
கையில் பெடியோடு உனது அண்ணி
கண் கலங்கப் பார்த்திருக்க
பார்த்தாயா…யா? புரியவில்லை
நினைவில் தெரியவில்லை.
தெருவோடு நீ ஓடி
துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி
குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம்
கனவாக மறைந்து போனாய்
சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய்
எம் கண்ணிலெல்லாம் காயாத
நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய்.
இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ..? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும், வாங்கி வா என்று அனுப்பினான்.
பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்றபோது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள்.
ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகி விட்டான்.
மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது.
மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி
பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென
விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே
பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா
தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு
தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த
கதைகள் பல இங்கு காதில் அடிபடுது
ஆனாலும் மயூரா உன்
உடலைக் காணவில்லையடா
விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு
விதி எமக்கு இல்லையடா - அதனால்தான்
உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது
சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா
பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில்
கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம்
நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம்
மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம்
உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம்
உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம்
- தீட்சண்யன்
மயூரனின் நண்பர்களின் நினைவில்
```````````````````````````````````````````````````````````
களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையிpல்
கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டாய்
களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை
வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே
எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே
என்றுன்னை நினைக்க மாட்டோம்
எரியாகி எரிந்து விட்டாய்
எரிமலையாகி வெடித்து விட்டாய்
நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா!
உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை
உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே
உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே…
- நண்பர்கள்
மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)
``````````````````````````````````````````````````````````````````````````````
அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன்.
அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை..
என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!
Quelle - tamilarinthagam.blogspot.de
Subscribe to:
Posts (Atom)